அமைச்சர் என்பதால் விலக்கு அளிக்க முடியாது.. மோசடி வழக்கில் செந்தில்பாலாஜி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!
விரைவில் இவர் மீது குற்றம் நிரூபிக்கபட்டால் பதவி இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் முதலில் அமைச்சர் பதவி இழப்பது இவர்தான் என பேசப்பட்டு வருகிறது.
By : Thangavelu
கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. தனது துறையில் வேலை வாங்கித்தருவதாக பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்வர்கள் இவர் மீது புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு எம்.எல்.ஏ., எம்.பி., மீதான நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது செந்தில்பாலாஜி திமுகவில் மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார். இதனால் தனக்கு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் என்று பல முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதி கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று செந்தில்பாலாஜிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் என்பதால் நேரில் ஆஜராக விலக்கு தரவோ, சலுகை வழங்கவோ முடியாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்துவிட்டனர்.
விரைவில் இவர் மீது குற்றம் நிரூபிக்கபட்டால் பதவி இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் முதலில் அமைச்சர் பதவி இழப்பது இவர்தான் என பேசப்பட்டு வருகிறது.