Kathir News
Begin typing your search above and press return to search.

சொத்து வரியை உயர்த்த சொன்ன மத்திய அரசின் ஆணையை காட்ட முடியுமா: கோவை ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வை சாடிய சி.பி.ராதாகிருஷ்ணன்!

சொத்து வரியை உயர்த்த சொன்ன மத்திய அரசின் ஆணையை காட்ட முடியுமா: கோவை ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வை சாடிய சி.பி.ராதாகிருஷ்ணன்!

ThangaveluBy : Thangavelu

  |  9 April 2022 12:14 PM GMT

மிக குறுகிய காலத்தில் மக்களிடம் கெட்ட பெயரை எடுத்துக்கொண்ட ஒரே அரசு திமுகவாகத்தான் இருக்கும். எப்போதும் பொய்யை சொல்லியே வெற்றி பெற்றுள்ளனர் என்று பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசு உயர்த்தி சொத்து வரியை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதே போன்று கோவை காந்திப்பார்க் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பேசும்போது, எப்போதும் சொல்வதை மட்டும் செய்வதாக கூறும் திமுக தற்போது சொல்லாததை மட்டுமே செய்து வருகிறது. கடந்தகால வரலாறு மீண்டும் தொடர்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சொத்துவரி விதித்தபோது, அக்கட்சியை பார்த்து, சொத்து வரியா? அல்லது சொத்தை பறிக்கிற வரியா? என்கின்ற கேள்வியை எழுப்பியவர்கள் திமுகவினர்.

ஆனால் தற்போது திமுக அரசு சொத்து வரியை 150 சதவீதமாக உயர்த்தி பொதுமக்களுக்கு துன்பத்தை கொடுத்துள்ளது. எனவே குறைந்த காலத்தில் கெட்டப்பெயரை எடுத்த அரசாங்கம் திமுகதான். மேலும், கொலுசை வைத்து கிடைத்த வெற்றியால் இனிமேல் கொலுசு பார்ட்டி எனவும் திமுக வைத்துக்கொள்ள வேண்டும். அதே போன்று உதய சூரியனுக்கு பதிலாக கொலுசு சின்னத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News