Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க, பா.ஜ.க. இடையே இழுபறி இல்லை.. பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி. தகவல்.!

அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை என்று அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

ThangaveluBy : Thangavelu

  |  3 March 2021 11:00 AM GMT

அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை என்று அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 இடங்களை ஒதுக்கியது. இதன் பின்னர் பாஜக மற்றும் தேமுதிகவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு ஒரு வழியாக முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.




இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியதாவது: அதிமுக, பாஜக தொகுதி தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை.

மேலும், அதிமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. 100 சதவீதம் பலன் கிடைக்கும். மேலும் எந்தெந்த தொகுதி என்பது விரைவில் தெரியவரும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News