Kathir News
Begin typing your search above and press return to search.

மின்தடை சரியாக இன்னும் நாலு மாசம் ஆகும் - கைவிரித்த செந்தில்பாலாஜி

Senthil balaji the minister of Electricity said in a statement that the current cut problems will be cured in next four month.

மின்தடை சரியாக இன்னும் நாலு மாசம் ஆகும் - கைவிரித்த செந்தில்பாலாஜி

Mohan RajBy : Mohan Raj

  |  1 Aug 2021 2:30 AM GMT

"இன்னும் 3 - 4 மாதம் ஆகும் தமிழகத்தில் மின்தடை சரியாக" என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார். குறைந்த மின் அழுத்தப் பிரச்னைகள் கடந்த ஆட்சியில் சரி செய்யப்படவில்லை. 3 - 4 மாததிற்குள் அந்த பிரச்னை சரி செய்யப்படும். இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் தமிழகத்தில் மின்தடையால் மக்கள் அவதிப்படும் நிலையில் மின்தடை பிரச்சனை சரியாக இன்னும் 3 அல்லது 4 மாதம் காலம் ஆகும் என மின்துறை அமைச்சர் கூறியது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Asianet நியூஸ்

Image courtesy: thehindubuisnessline


Next Story
கதிர் தொகுப்பு
Trending News