Kathir News
Begin typing your search above and press return to search.

தொலைபேசியில் கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார் அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.!

தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைபேசியில் கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார் அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.!

ThangaveluBy : Thangavelu

  |  10 Jun 2021 3:48 AM GMT

தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சி.வி.சண்முகம். தற்போது அவர் சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் அவரை சசிகலா ஆதரவாளர்கள் சிலர் தொலை பேசி வாயிலாக கொலை மிட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.




இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News