இந்துக்களை பற்றி தி.மு.க மனதில் உள்ளதை கூறினாரா எம்.பி ஆண்டிமுத்து ராசா?
'இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன் என இந்துக்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும்' ஆ.ராசா பேசியது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
By : Mohan Raj
'இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன் என இந்துக்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும்' ஆ.ராசா பேசியது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
தி.மு.க எம்.பி ஆ.ராசா இந்துக்களைப் பற்றி அவ்வப்போது அவதூறாக பேசுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தி.க தலைவர் வீரமணிக்கான பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் பேசிய ஆ.ராசா கூறியதாவது, 'உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாம இருந்தால், பெர்சியாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாக தான் இருக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் சொல்கிறது இப்படிப்பட்ட கொடுமை வேற எந்த நாட்டிலாவது உண்டா?
'இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்' என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆ.ராசா இதுபோல் அருவருக்கத்தக்க வகையில் பேசியது அனைவரையும் கொதிப்படைய செய்துள்ளது.