நான் எதிர்த்ததால் ரஜினி அரசியலை கைவிட்டுட்டாரா.? சீமான் என்ன சொல்கிறார்.!
நான் எதிர்த்ததால் ரஜினி அரசியலை கைவிட்டுட்டாரா.? சீமான் என்ன சொல்கிறார்.!
By : Kathir Webdesk
அரசியல் ரீதியில் ரஜினியை கடுமையாக பேசியிருக்கிறேன் அதற்காக தற்போது வருந்துகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ரஜினிகாந்தும் அவரது குடும்பத்தினரும் கருதுவதுபோன்று அவரது உடல்நலன், மன அமைதி, நிம்மதி முதன்மையானது. அதனை விரும்பியே அவருக்கு அரசியல் வேண்டாம் என பலமுறை கருத்துகளை பதிவு செய்திருக்கிறேன். கடந்த காலங்களில் ரஜினிகாந்த் மீது பெரும் மதிப்பு வைத்திருந்த ரசிகன் நான்.
அரசியல் ரீதியாக வரும்போது அவர் மீது கடுமையான விமர்சனங்களை கடும் சொற்களை பயன்படுத்தி விட்டேன். அது அவரையோ, அவரது குடும்பத்தினரையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எதிர்த்ததால் அரசியல் முடிவை கைவிட்டுவிட்டதாக நான் எண்ணவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் ரஜினிகாந்தின் முடிவு வரவேற்கத்தக்கது.
நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும். மக்களுக்கு சேவை செய்யட்டும். ஆனால் எடுத்தவுடனே புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி தேர்தலில் நிற்பது என்பதுதான் கோபத்தை வரவழைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.