Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க'வினரின் மிரட்டல்களால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அ.தி.மு.க வேட்பாளர்!

தி.மு.கவினரின் மிரட்டல்களால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அ.தி.மு.க வேட்பாளர்!

DhivakarBy : Dhivakar

  |  10 Feb 2022 12:42 PM GMT

தி.மு.க வேட்பாளரின் மிரட்டலுக்கு அஞ்சி, அ.தி.மு.க வேட்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறங்களிலும், அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை களம் இறக்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து நகர்ப்புறங்களிலும் ஆளும் தி.மு.க'விற்கு எதிரான அலை உருவாகியுள்ளதால், அக்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். ஆகையால் பல இடங்களில் அத்துமீறல்களை தி.மு.க'வினர் நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். இதன் வரிசையாக, காஞ்சிபுரம் மாநகராட்சி 36'வது வார்டில், அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் ஜானகிராமன் அவர்களை தி.மு.க'வினர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் அப்பகுதி அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க வேட்பாளர் ஜானகிராமன் அவர்களுக்கும் ,தி.மு.க வேட்பாளர் சுப்புராயன் அவர்களுக்கும் கடுமையான போட்டி நிலவியது. ஆகையால் தி.மு.க'விலிருந்து ஜானகிராமனுக்கு பல விதத்தில் அழுத்தங்களும், கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுவந்தது. இதன் காரணமாக ஜானகிராமன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த ஜானகிராமனுக்கு நீதிகேட்டு அ.தி.மு.க'வினர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் மறியலில் இறங்கினர்.


ஜானகிராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சுப்புராயன் தி.மு.க அமைச்சர் தா.மோ அன்பரசனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

News J

Next Story
கதிர் தொகுப்பு
Trending News