Kathir News
Begin typing your search above and press return to search.

"தி.மு.க'காரன் கேட்குறேன் சிகரெட் லேட்டா தர்ற" - பெண்ணின் உடையை இழுத்து தி.மு.க'வினர் தஞ்சையில் அட்டகாசம் !

Breaking News.

தி.மு.ககாரன் கேட்குறேன் சிகரெட் லேட்டா தர்ற -  பெண்ணின் உடையை  இழுத்து தி.மு.கவினர் தஞ்சையில் அட்டகாசம் !

Mohan RajBy : Mohan Raj

  |  13 Sep 2021 9:15 AM GMT

"தி.மு.க'காரனுக்கு சிகரெட் லேட்டா தர்றியா?" என தஞ்சை மாவட்டத்தில் கடை உரிமையாளர் பெண்ணை உடையை பிடித்து இழுத்து தி.மு.க'வினர் பிடித்து இழுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை சூரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை சாலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அங்கு நேற்று மாலை மன்னார்குடி நகரை சேர்ந்த தி.மு.க 4வது வட்ட பிரதிநிதி பாண்டவர், மற்றும் மன்னார்குடி நகர தி.மு.க இளைஞரணி'யை சேர்ந்த சுதாகர் மற்றும் தி.மு.க பிரமுகர்களான முருகேசன், சுரேஷ், பிரபு, இசையரசன் ஆகியோர் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற ஓர் கறி விருந்துக்கு சென்று திரும்புகையில் ஆனந்தன் டீக்கடையில் சென்று டீ குடித்துள்ளனர்.

அதேசமயத்தில் அவர்கள் கேட்ட சிகரெட்டை கடையில் உள்ள பெண் தர தாமதமானதால் மது போதையில் இருந்த தி.மு.க'வினர் அந்த பெண்ணின் உடையை பிடித்து இழுத்து அந்த கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.

பின்னர் அங்கு வந்த ஆனந்தன் போலீசரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் ஆனந்தன் போலீசில் புகார் அளிக்க கூடாது என தி.மு.க முக்கிய பிரமுகரும் மிரட்டியதாக தெரிகிறது. தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து வணிகர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருவது வேதனையானது.


Source - NEWS J

Next Story
கதிர் தொகுப்பு
Trending News