Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்குறுதிக்கு வெள்ள அறிக்கை, பழிவாங்க ரெய்டு - தி.மு.க'வின் விடியல் !

பழிவாங்குவதற்கு ரெய்டை கையில் எடுத்துள்ளது.

Mohan RajBy : Mohan Raj

  |  10 Aug 2021 3:30 PM IST

"தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு வேலுமணி தான் முதலில் கைது செய்யப்படுவார்" என கூறினார் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின். அதனை நிறைவேற்ற தற்பொழுது முனைப்பு காட்டுகிறார்.

தி.மு.க தேர்தல் பிரச்சாரங்களின் போது வாக்குறுதிகள் அளவிற்கு அ.தி.மு.க'வின் அமைச்சர்களை பற்றி ஊழல் புகார்கள் பேசப்பட்டன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை தி.மு.க மறந்துவிட்டதே தவிர அ.தி.மு.க'வை பழிவாங்குவதை மறந்துவிடவில்லை. அன்று பிரச்சாரத்தில் கூறியது போல், "தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு வேலுமணி தான் முதலில் கைது செய்யப்படுவார்" என்ற ஸ்டாலினின் வார்த்தைகளை தற்பொழுது உண்மையாக்கும் முயற்சியில் தி.மு.க அரசு முழு வீச்சில் இறங்கி வருகிறது. அதன் வெளிப்பாடாக இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான 60 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்கு 'வெள்ளை அறிக்கையை' பதிலாக அளித்த தி.மு.க, பழிவாங்குவதற்கு ரெய்டை கையில் எடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News