Kathir News
Begin typing your search above and press return to search.

பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் செயல்படும் மானாமதுரை தி.மு.க.வினர்.!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, திமுக கட்சியினரின் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் தமிழரசி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் செயல்படும் மானாமதுரை தி.மு.க.வினர்.!

ThangaveluBy : Thangavelu

  |  18 March 2021 2:55 AM GMT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, திமுக கட்சியினரின் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் தமிழரசி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் சூழலில், பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.




இந்நிலையில், திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பொது இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் கொரோனா விதிமுறையை மீறி வருகின்றனர். அதே போன்று மானாமதுரை தொகுதியில் திமுக வேட்பாளராக நிற்கும் தமிழரசி முககவசம் அணியாமலேயே கூட்டத்தில் பங்கேற்று சென்றுள்ளார். இவரே இப்படி இருந்தால் அந்த கட்சியை நம்பி வரும் தொண்டர்களும் பொது இடங்களில் முறையாக முககவசம் அணியாமலே இருக்கின்றனர்.

இது போன்றவர்களால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் சூழல் உருவாகிறது என்று மானாமதுரை மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். முககவசம் அணியாமல் இருக்கும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானாமதுரை மக்கள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News