Kathir News
Begin typing your search above and press return to search.

கவுன்சிலர் சீட் வாங்குவதில் பிரச்சினை: தி.மு.க. வட்ட செயலாளர் வெட்டிப்படுகொலை: சென்னையில் பயங்கரம்!

சென்னை, மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். மேலும், திமுகவில் வட்டச் செயலாளராகவும் உள்ளார்.

கவுன்சிலர் சீட் வாங்குவதில் பிரச்சினை: தி.மு.க. வட்ட செயலாளர் வெட்டிப்படுகொலை: சென்னையில் பயங்கரம்!

ThangaveluBy : Thangavelu

  |  2 Feb 2022 7:22 AM GMT

சென்னை, மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். மேலும், திமுகவில் வட்டச் செயலாளராகவும் உள்ளார். இதனிடையே சென்னை மாநகராட்சியில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 188வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுவதாக செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற வார்டுகளிலும் சீட் வழங்குவதில் செல்வத்தின் குறுக்கீடு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்வம் நேற்று இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திமுக சார்பில் சால்வை அணிவிப்பது போன்று 6 பேர் கொண்ட கும்பல் செல்வத்தை சராமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த செல்வத்தை அருகாமையில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மடிப்பாக்கம் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் சென்னையில் தொடர்கிறது என பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டியா அல்லது கவுன்சிலர் சீட் வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு கொலை நடைபெற்றதா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

Source, Image Courtesy: Asiannet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News