Kathir News
Begin typing your search above and press return to search.

"இடத்தை எழுதி தர்றியா இல்லை குடும்பத்தோடு கொளுத்தவா?" - மிரட்டும் சேலம் மாவட்ட தி.மு.க நிர்வாகி !

இடத்தை எழுதி தர்றியா இல்லை குடும்பத்தோடு கொளுத்தவா? - மிரட்டும் சேலம் மாவட்ட தி.மு.க நிர்வாகி !

Mohan RajBy : Mohan Raj

  |  26 Nov 2021 8:15 AM GMT

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்றால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்னை குடும்பத்துடன் கொளுத்தி விடுவேன்" என மூத்த தி.மு.க உடன்பிறப்பிடமே நிலஅபகரிப்பு செய்துள்ள தற்போதைய தி.மு.க உடன்பிறப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல், தி.மு.க பிரமுகரான இவர், தி.மு.க'வில் மல்லூர் நகர துணை செயலாளராக கடந்த 1971 முதல் 1976 வரை பொறுப்பில் இருந்துள்ளார். இவரது தாயார் தங்காயம்மாள் கடந்த 2002'ல் அவரது பெயரில் இருந்த நிலத்தை கதிர்வேல் மீது தான கிரயம் செய்து கொடுத்துள்ளார். அந்த இடத்திலேயே வீடுகட்டி கடையும் கட்டி வசித்து வருகிறார் கதிர்வேல்.

அந்த வீட்டின் ஒரு அறையை தி.மு.க கட்சி அலுவலகம் நடத்திக்கொள்ள சுரேந்திரன் என்பவருக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு வாடகைக்கு கொடுத்துள்ளார். சுரேந்திரன் தற்போது தி.மு.க'வில் மல்லூர் பேரூர் கழக செயலாளர் என்ற பொறுப்பில் உள்ளார்.

வயது முதிர்வு காரணமாக வருமானத்திற்காக ஒரு கடை வைக்க எண்ணி கதிர்வேர் தி.மு.க அலுவலகத்தை காலி செய்ய சுரேந்திரனிடம் 7 மாதம் முன் கூறியிருந்தார்.

ஆனால், சுரேந்திரன் அந்த இடத்தை காலிசெய்ய மறுத்ததுடன், வாடகையும் தராமல், அந்த இடத்தை முழுவதும் தன்னிடம் கொடுத்துவிட்டு நீங்கள் காலி செய்து விடுங்கள் என்று கூறியதுடன், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்றால் கூட ஒன்றும் செய்ய முடியாது உன்னை குடும்பத்துடன் கொளுத்தி விடுவேன்" என மிரட்டுவதாகவும் கதிர்வேல் சுரேந்திரன் மீது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார்.


Source - News 18 Tamil nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News