Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரையில் பெண்களை வைத்து பாலியல் தொழில்.. தப்பியோட நினைத்த திமுக நிர்வாகி கைது.!

மதுரையில் பெண்களை வைத்து பாலியல் தொழில்.. தப்பியோட நினைத்த திமுக நிர்வாகி கைது.!

மதுரையில் பெண்களை வைத்து பாலியல் தொழில்.. தப்பியோட நினைத்த திமுக நிர்வாகி கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Dec 2020 6:33 PM GMT

மதுரை அருகே பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த திமுக நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை ஆத்திக்குளம் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒரு நபர் 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களை மடக்கி பிடித்த போலீசார், அங்கிருந்த 3 பெண்களையும் 5 ஆண்களையும் கைது கொத்தாக கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைதானவர்களுள் ஒருவரான பூசமலை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரி பகுதியை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் என்பதும் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு கட்சியில் பொறுப்பில் உள்ள நபர் இது போன்று பெண்களை சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவது வேதனை அளிப்பதாக அப்பகுதி பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்றவர்களை போலீசார் ஆரம்பத்தில் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையும் கூட.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News