Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க.வில் இணைந்தார் தி.மு.க. முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன்: தருமபுரியில் காலியாகும் தி.மு.க. கூடாரம்.!

திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இன்று தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்.

அ.தி.மு.க.வில் இணைந்தார் தி.மு.க. முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன்: தருமபுரியில் காலியாகும் தி.மு.க. கூடாரம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 March 2021 11:21 AM GMT

திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இன்று தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், அன்புமணி ராமதாஸை சந்தித்தார். இதன் காரணமாக அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கமால் அமைத்தி காத்து வந்தார்.





இந்நிலையில், தருமபுரி மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். அப்போது திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தனது ஆதரவாளர்களுடன் சென்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருடன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் பாமக தலைவர் ஜி.கே.மணி உடனிருந்தனர்.

கட்சியில் இணைந்த திமுகவினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். தருமபுரியில் திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்ததால், அதிமுகவின் வெற்றி இன்னும் பிரகாசமாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News