Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க. வாழ்ந்து கொண்டிருக்கும்.. தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி கூட கிடைக்காது.. அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:

அ.தி.மு.க. வாழ்ந்து கொண்டிருக்கும்.. தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி கூட கிடைக்காது.. அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

ThangaveluBy : Thangavelu

  |  1 March 2021 5:47 AM GMT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:

'தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதலமைச்சர் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் இறுதி நாள் அன்று முதலமைச்சர் பேசியது அவராக பேசவில்லை. ஜெயலலிதாவின் ஆன்மாதான் அவர் மனதில் இருந்து பேசியது.




மேலும், திமுக கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்க தயாரா? கடந்த தேர்தல் முடிவு வருவதற்கு முன்னதாகவே அமைச்சரவை ஒத்திகை பார்த்து நாடகம் நடத்தியவர்தான் ஸ்டாலின் என்று குற்றம்சாட்டினார்.

மகராசியாக இருந்தவர் ஜெயலலிதா. அதே போன்று தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழை ராசி பெற்றவராக உள்ளார்.




சட்டமன்றம் நடைபெற்ற கடைசி கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் ஜனநாயக கடமையை ஆற்றவில்லை. அதிமுகவை பொறுத்தவரையில் தொண்டர்களை நம்பி தேர்தலில் நிற்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களை நம்பாமல் ஐ பேக் பிரசாத் கிஷோரை நம்பியுள்ளார். வரும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆனால் திமுக வீழ்ந்து போகும். எதிர்க்கட்சியாக கூட வராது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News