Kathir News
Begin typing your search above and press return to search.

என்னுடைய பையன் தான் அடுத்து எல்லாமே - தி.மு.க பொதுக்கூட்டத்தில் அறிவித்த துரைமுருகன்!

என்னுடைய பையன் தான் அடுத்து எல்லாமே - தி.மு.க பொதுக்கூட்டத்தில் அறிவித்த துரைமுருகன்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Jun 2022 3:50 PM IST

கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட காங்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. அதில் பேசிய துரைமுருகன் பல ஆண்டுகளாக கீழ்வைத்தியனான்குப்பம் தனித் தொகுதியாக இருந்து வரும் சூழலில் தொகுதி மறுசீரமைப்பின் கீழ் அடுத்த தேர்தலில் பொதுத் தொகுதியாக மாறும் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த தேர்தலில் இந்த தொகுதிக்கு என் மகன் கதிர் ஆனந்த் தான் எம்.எல்.ஏ. என்பதையும் கூறினார். தாம் பிறந்த மண், ஓடியாடி விளையாடிய மண் என்பதால் கே.வி.குப்பம் மக்கள் மட்டும் தன்னை உரிமையுடன் துரைமுருகன் அழைக்கலாம் எனப்பேசினார்.

கதிர் ஆனந்த் ரொம்ப நல்லா பேசுவதாகவும் தனக்கே போட்டியாக வந்துவிட்டாலும் வந்துவிடுவார் எனவும் நகைச்சுவை செய்த துரைமுருகன், கே.வி. குப்பம் மக்களின் நல்லது கெட்டது என அனைத்திலும் முன் நிற்க வேண்டும் என தனது மகன் கதிர் ஆனந்தை கேட்டுக்கொண்டார். தேர்தலுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போதே இதனைக்கூற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

Input From: Oneindia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News