Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை! - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை!  - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

ThangaveluBy : Thangavelu

  |  3 Oct 2021 9:37 AM GMT

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக 505 பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்தது. கடந்த 5 மாதங்களில் அவர்கள் எந்தவிதமான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

அதிமுக ஆட்சியில் மகளிருக்கான தாலிக்கு தங்கம், ஸ்கூட்டி திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் திமுக ஆட்சியில் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. தொடர்ந்து திமுகவினர் அளித்து வந்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஓட்டு போட்டனர். தற்போது எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

மேலும், அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்கா இருந்து வந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 7 Tamil

Image Courtesy:Admk


Next Story
கதிர் தொகுப்பு
Trending News