Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க வெடிக்கும் தருணம்! மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி மரணத்தில் மர்மம்!

தி.மு.க வெடிக்கும் தருணம்! மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி மரணத்தில் மர்மம்!

தி.மு.க வெடிக்கும் தருணம்! மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி மரணத்தில் மர்மம்!

Muruganandham MBy : Muruganandham M

  |  6 Jan 2021 7:15 AM GMT

தி.மு.க. உடையும் தருணம் வந்து விட்டது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது கானல் நீராகவே இருக்கும். இதனை ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரர் அழகிரியே தற்போது தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகளை நிராகரித்துவிட்டு, தனது மகன் உதயநிதியை மட்டுமே ஸ்டாலின் உயர்த்த பார்க்கிறார்.

கிராம சபையை குண்டர் சபையாக அவர் மாற்றியுள்ளார்.திமுக முடிந்து போன அத்தியாயம்.திமுக தலைவர் கருணாநிதி மரணத்தில் மர்மம் உள்ளதாக மு.க.அழகிரி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதற்கு முதலில் ஸ்டாலின் பதில் கூற வேண்டும். அம்மா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

திமுக வெடிக்கும் தருணம் வந்துவிட்டது. ஆயுள் முழுக்க போஸ்டர் மட்டுமே ஸ்டாலினால் அடிக்க முடியுமே தவிர முதல்வராக முடியாது. தமிழ்நாட்டில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷ்ன் அறிமுகம் செய்தது திமுக தான் என்றும், ஸ்டாலின் உத்தமன் போல் பேசுவதை மக்கள் நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்திப் பேசியவர் கருணாநிதி. பாம்பு குட்டி போட்டால் பாம்புக்குட்டி தானே பிறக்கும். புலிக்குட்டியா பிறக்கும். ஆகவேதான் கருணாநிதிக்கு பிறந்த மகன் ஸ்டாலின் கேள்வி கேட்ட பெண்ணை இழிவு படுத்தியுள்ளார்.

அரசு செயல்படவில்லை என்று பேசும் ஸ்டாலின் உங்கள் கட்சியை செயல்பட வைக்க சொந்த மூளை இல்லாமல் பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரை கொண்டு வந்தது ஏன்? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News