Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் ரம்மி வைத்து திமுக அரசியல் செய்கிறது: புதிய தமிழகம் தலைவர் கருத்து!

ஆன்லைன் ரம்மியை வைத்துக்கொண்டு திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கருத்து.

ஆன்லைன் ரம்மி வைத்து திமுக அரசியல் செய்கிறது: புதிய தமிழகம் தலைவர் கருத்து!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 March 2023 1:30 AM GMT

நீட் தேர்வு போல ஆன்லைன் சூதாட்டத்தை வைத்து தி.மு.க அரசியல் செய்ய பார்க்கிறது என்று புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தற்போது தெரிவித்திருக்கிறார். குறிப்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும் பொழுது, மாதம் ஒரு முறை மின் அளவீடு எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி தி.மு.க தரப்பில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தி.மு.க இன்னும் அதை நிறைவேற்றவில்லை. குறிப்பாக அதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை, இது பற்றி மற்ற கட்சிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்துகிறது.


கொடுத்த வாக்குறுதிகளை காலப்போக்கில் மக்கள் மறந்து விடுவார்கள் என தி மு.க நினைப்பது மிகவும் தவறானது என்று அவர் கூறுகிறார். பல்வேறு முறைகேடுகள் நடத்தி ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றியை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் உண்மையில் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தெரியவரும்.


ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று நோக்கம் தி.மு.க அரசுக்கு இல்லை. நீட் தேர்வு வைத்து அரசியல் செய்ததை போல தான் தற்பொழுது ஆன்லைன் ரம்மியை வைத்து அரசியல் செய்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு மத்திய அரசுதான் சட்டம் இயற்ற முடியும் என வலுவான கருத்தை ஆளுநர் கூறியிருக்கிறார். அதை சட்டரீதியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மீது குற்றம் சாட்டக் கூடாது என்று அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

Input & Image courtesy: Hindu News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News