Kathir News
Begin typing your search above and press return to search.

"ஜெயிச்சுட்ட இல்லை ஒரு கோடி குடு" - ஒன்றிய சேர்மனை மிரட்டும் தி.மு.க மாவட்ட செயலாளர் !

ஜெயிச்சுட்ட இல்லை ஒரு கோடி குடு - ஒன்றிய சேர்மனை மிரட்டும் தி.மு.க மாவட்ட செயலாளர் !

Mohan RajBy : Mohan Raj

  |  30 Oct 2021 7:15 AM GMT

தி.மு.க மாவட்ட செயலாளர் பணம் கேட்டதால் பதவியை ராஜினாமா செய்வதாக ஒன்றிய சேர்மன் பேசிய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் சேர்மனாக தி.மு.க'வை சேர்ந்த செல்லம்மாள் மறைமுக தேர்தலில் வெற்றிபெற்றார், ஆனால் இன்று அவர் பதவியை உட்கட்சி பிரச்சனையால் ராஜினாமா செய்ததாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். தற்போதைய சூழலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தொடர முடியாததாகக்கூறி ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அளித்து சென்றார்.

இந்த சூழலில், தற்போது அவர் தி.மு.க மாவட்ட செயலாளர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டதாக பேசும் வீடியோ வெளியானது. இந்த புகார் குறித்து மாவட்ட செயலாளர் சிவ பத்மனாபனிடம் மறுத்துள்ளார். பத்து ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரத்தில் தி.மு.க'வினர் இல்லாத காரணத்தினால் ஊழல், லஞ்சம் ஆகியவை அதிகளவில் தி.மு.க ஆட்சியில் நடப்பதாக கடந்த இரண்டு மாதங்களாக அதிகளவில் புகார்கள் கிளம்பி வருவது குறிப்பிடதக்கது.


Souece - புதிய தலைமுறை

Next Story
கதிர் தொகுப்பு
Trending News