Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஊழலை அம்பலப்படுத்தியதால் 'அண்ணாமலை ஒரு பொறுக்கி' என திட்டிய தி.மு.க அமைச்சர் தா.மோ.அன்பரசன்

'அண்ணாமலை ஒரு பொறுக்கி' என தி.மு.க அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க ஊழலை அம்பலப்படுத்தியதால் அண்ணாமலை ஒரு பொறுக்கி என திட்டிய தி.மு.க அமைச்சர் தா.மோ.அன்பரசன்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Jun 2022 6:30 AM GMT

'அண்ணாமலை ஒரு பொறுக்கி' என தி.மு.க அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 11 மணியளவில் தி.மு.க'வின் இரு பெரும் ஊழல் பற்றி அண்ணாமலை பகிரங்கப்படுத்தியது தி.மு.க'வில் சலசலப்பை ஏற்படுத்தியது, குறிப்பாக தி.மு.க அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியம் ஆகியோர் உடனடியாக இதற்கு ஆதாரம் இருக்கா என கேட்டு அருகில் பதற ஆரம்பித்தனர்.


இதனைத்தொடர்ந்து தி.மு.க'வின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது, 'அண்ணாமலை ஒரு பொறுக்கி! ஐ.பி.எஸ் ஆக இருந்தபோது ரவுடிகளை சிறையில் அடைந்தவர், தற்போது ரவுடிகளை கட்சியில் சேர்த்து வருகிறார்' என நாகரீகமற்ற வார்த்தைகளைப் பிரயோகித்து பேசினார்.

இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்து வந்தவண்ணம் உள்ளன. தி.மு.க அமைச்சர் இவ்வாறு பேசியிருக்க கூடாது என ஒரு தரப்பினரும், ஒரு தரப்பினர் தி.மு.க'வின் உண்மையான முகம் வெளியில் தெரியத் துவங்கி விட்டது எனவும் கருத்துக்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News