Kathir News
Begin typing your search above and press return to search.

விடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏ'வின் பெயர்: காலி செய்திடுவோம் என்று அதிகாரியை மிரட்டிய தி.மு.க எம்.எல்.ஏ!

தி.மு.க எம்.எல்.ஏவின் பெயர் விடுபட்ட காரணத்தினால் அதிகாரியை மிரட்டிய தி.மு.க எம்.எல்.ஏ.

விடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏவின் பெயர்: காலி செய்திடுவோம் என்று அதிகாரியை மிரட்டிய தி.மு.க எம்.எல்.ஏ!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Dec 2022 2:26 AM GMT

திருப்பூர் பூலுவபட்டியில் நடக்கும் மருத்துவமனை கட்டுமானப் பணியை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஒரு ஆய்வுக்குப் பிறகு அலுவலக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, உதவி பொறியாளர் ராஜா வந்திருப்பவர்களின் பெயரை வாசித்தார். திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு க எம்.எல்.ஏ செல்வராஜின் பெயர் விடுபட்டது. தன் பெயர் விடுபட்டிருந்ததை அறிந்த தி.மு.க எம்.எல்.ஏ மிகவும் கோபமடைந்தார்.


பதவியில் இருக்கும் அந்தஸ்து காரணமாக, கூட்டம் என்று கூட பாராது உதவி பொறியாளரை அனைவரின் முன்பும் சரமாரியாக திட்டினார். எப்படி தன் பெயரை நீங்கள் விடுபட்டுக் கூறலாம் என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். பிறகு கோபத்திற்கு இடையில், இப்படி அலட்சியமாக செயல்பட்டதற்கு உங்கள் பதவியை காலி செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டும் தொனியில் கேட்டு இருக்கிறார். இதன் காரணமாக பயந்த உதவி பொறியாளர் சாரி என்று கூறி இருக்கிறார். சாரி என்ன? சாரி மண்ணாங்கட்டி சாரி என்று தி.மு.க எம்.எல்.ஏ பேசி இருப்பதோ கேமராவில் பதிவாகி இருக்கிறது.


இதனை அறிந்து கொண்ட தி.மு.கவினர் கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை நீக்கும்படி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இப்படி பொதுக்கூட்டத்தின் பொது தன்னுடைய பெயர் விடுபட்டிருப்பதன் காரணமாக, ஒருவருடைய பதவியே காலி செய்து விடுவேன் என்று எம்.எல்ஏ கூறியிருக்கிறார். இந்த ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News