Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. எம்.எல்.ஏ., ராஜினாமா.. தலைமை மீது அதிருப்தி.!

தி.மு.க. எம்.எல்.ஏ., ராஜினாமா.. தலைமை மீது அதிருப்தி.!

தி.மு.க. எம்.எல்.ஏ., ராஜினாமா.. தலைமை மீது அதிருப்தி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Feb 2021 4:24 PM GMT

புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே 4 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது திமுக எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளது புதுச்சேரி அரசியலில் அதிரடியான திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், புதுச்சேரி சட்டபேரவை தலைவர் அவர்கள், புதுச்சேரி, அன்புடையர் வணக்கம், நான் புதுச்சேரி 14வது சட்டபேரவையின் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டடேன். 21.02.2021 இன்று முதல் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இவர் ராஜினாமா செய்தது மற்றொரு காரணமும் உள்ளதாம். திமுக தலைமை மீது இவருக்கு அதிருப்தி உள்ளது என கூறப்படுகிறது. இதனாலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News