Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் வெற்றி: அம்மன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்திய தி.மு.க எம்.எல்.ஏ.!

தேர்தல் வெற்றி: அம்மன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்திய தி.மு.க எம்.எல்.ஏ.!

ThangaveluBy : Thangavelu

  |  16 April 2022 2:05 PM GMT

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் அம்மன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ., கதிரவன். கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் முதன்முறையாக திமுக சார்பாக போட்டியிட்டார். திமுக அளித்த பொய்யான வாக்குறுதியால் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பிரச்சாரத்தின்போது ஓமாந்தூரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வமான மாசி பெரியண்ண சுவாமி கோயிலில் வேண்டுதலை வைத்தார். அதாவது தேர்தலில் வெற்ற பெற்றால் மொட்டை அடித்து கொள்கிறேன் என்றார். அதன்படி தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திமுக எம்.எல்.ஏ., கதிரவன் மொட்டை அடித்துக்கொண்டார். சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தார்.

இவரது வேண்டுதலை பார்த்த திமுகவினர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதாவது கடவுள் மறுப்பு கொள்கையில் இருக்கும் திகவுடன் கூட்டணியில் இருக்கும் திமுகம் அதே நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி வருகிறது. தற்போது அவர்கள் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் கோயிலுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News