Kathir News
Begin typing your search above and press return to search.

'செருப்பு பிஞ்சுடும்' என அரசு அதிகாரியை மிரட்டிய தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன் !

செருப்பு பிஞ்சுடும் என  அரசு அதிகாரியை மிரட்டிய தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன் !

Mohan RajBy : Mohan Raj

  |  20 Oct 2021 3:03 AM GMT

"செருப்பு பிஞ்சிடும்" என மரியாதைக்குறைவாக அமைச்சர் முன்னிலையிலேயே அரசு ஊழியர்களை மிரட்டியுள்ளார் தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசன்.

தி.மு.க'வின் ஆட்சிகாலத்தில் அரசு அதிகாரிகளை ஆணவத்துடன் மிரட்டும் வேலை ஜரூராக நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் சுற்றுலா வரும் யாத்திரிகர்கள் மற்றும் பக்தர்கள் தங்கும் வசதிகள் தமிழக அரசின் சார்பில் சர்வ தீர்த்த குளம் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடமும் கட்டப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, டி.எஸ்.பி முருகன், எம்.எல்.ஏ எழிலரசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது, பயணியர் தங்கும் விடுதி அருகே தனியாருக்கு சொந்தமான ஏராளமான சரக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிலத்தில் லாரிகளை நிறுத்தி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை தடுக்காத அறநிலையத் துறை ஊழியர்களை அமைச்சர் மற்றும் ஆட்சியர் முன்னிலையிலேயே செருப்பு பிஞ்சிடும் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவே கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நடந்தேறியிருந்தால் அரசு ஊழியர்கள் அமைப்பு கொந்தளித்திருந்திருக்கும், ஊடகங்கள் இதனை முக்கிய செய்தியாக மாற்றியிருக்கும் தற்பொழுது தி.மு.க ஆட்சிகாலம் என்பதால் இதனை மூடி மறைக்கின்றனர் கன பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News