Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க எம்.எல்.ஏ'க்கள் ஒரு சிலரிடம் பேரம் துவங்கிவிட்டது - பகீர் கிளப்பும் காடேஸ்வர சுப்ரமணியம்

'மகாராஷ்டிரா போல தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என தெரியவில்லை' என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கூறியுள்ளார்.

தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒரு சிலரிடம் பேரம் துவங்கிவிட்டது - பகீர் கிளப்பும் காடேஸ்வர சுப்ரமணியம்

Mohan RajBy : Mohan Raj

  |  1 July 2022 6:46 AM GMT

'மகாராஷ்டிரா போல தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என தெரியவில்லை' என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கூறியுள்ளார்.

இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது, இந்த பயணத்தை தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்து உரிமை மீட்பு பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காடேஸ்வர சி.சுப்பிரமணியன் பேசும்போது, 'தமிழகத்தில் இந்துக்களின் உரிமை என்பது மீட்கப்பட வேண்டும், இந்துக்களின் உரிமைகளை தமிழக அரசு வழங்கவில்லை. இந்த அரசு நான்காண்டு நீடிக்குமா மூன்றாண்டு நீடிக்குமா என சொல்ல முடியாது, மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும் நேற்று மகாராஷ்டிரா முதல் ராஜினாமா செய்து விட்டார்.


அதுபோல் தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என தெரியவில்லை. ஏற்கனவே எம்.எல்.ஏ'க்கள் ஒரு சிலரிடம் பேரம் பேசுவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் உளவுத்துறை மூலமாக வருகிறது இந்துக்கள் விழிப்படைந்து விட்டார்கள், வருகின்ற 24 அல்லது 26 ஆகட்டும் யார் இந்துக்களுக்கு ஆதரவு தருகிறார்களோ அவர்களுக்கு நல்ல காலம்' என எச்சரிக்கை விடுத்தார்.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News