திருந்தவே திருந்தாத தி.மு.க! மீண்டும் ஆபாசமாக பேசும் திமுக நிர்வாகி - அண்ணாமலை தாயார் குறித்து கேவலமான பேச்சு
திருந்தவே திருந்தாத தி.மு.க! மீண்டும் ஆபாசமாக பேசும் திமுக நிர்வாகி - அண்ணாமலை தாயார் குறித்து கேவலமான பேச்சு
By : Mohan Raj
திருந்தவே திருந்தாத தி.மு.க! மீண்டும் ஆபாசமாக பேசும் திமுக நிர்வாகி - அண்ணாமலை தாயார் குறித்து கேவலமான பேச்சு
தி.மு.க ஆபாச பேச்சு எல்லையை மீறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது மேலும் ஒரு சம்பவமாக தி.மு.க'வின் பேச்சாளர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தாயார் பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.
ஆபாச பேச்சு தி.மு.க, தி.மு.க என்றாலே ஆபாச பேச்சு என்பது வரலாற்றில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்சியை துவங்கிய அண்ணாதுரை முதல் தற்பொழுது மேடையில் பேசும் கடைமட்ட தொண்டன் வரை காதில் கேட்க முடியாத வார்த்தைகளை பேசுவதையே பெருமையாக நினைத்துக்கொண்டு மேடையில் பேசுவார்கள், அதனையும் பெருமையாக கூறுவார்கள், அதனை கேட்டுகொண்டு தி.மு.க தலைவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்,ம் தி.மு.க தொண்டர்கள் குஷியாகி விசிலடிப்பார்கள். இது தி.மு.கவினர் ரத்தத்தில் ஊறியது என பலமுறை விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதற்கு வரலாற்றுச் சான்றுகளும், நடக்கும் சம்பவங்களும் நிரூபித்து வருகின்றன. ஆரம்பகால அண்ணாதுரை நடிகை பற்றி பேசியதும், கருணாநிதி திராவிட நாடு பற்றி உதாரணம் கூறுகையில் பாவாடை நாடா பற்றி பேசியதும், அதன் பிறகு ஸ்டாலின் ஜெயலலிதா அம்மையார் பற்றி பேசியதும், அவரது மகனும், தற்போதைய தி.மு.க'வின் அமைச்சர் உதயநிதி சசிகலா அம்மையார் காலில் எடப்பாடி விழுந்ததை குறித்து அவதூறாக பேசியதும், சமீபத்திய சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி தயார்பற்றி தி.மு.க'வின் எம்.பி ஆ.ராசா அவதூராக பேசியதும் தி.மு.க'வின் ஆபாச பேச்சுகளுக்கான வரலாற்று சுவடுகள்.
இந்த நிலையில் கடந்த மாதம் தி.மு.க'வின் பேச்சாளர் சைதை சாதிக் தி.மு.க நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பா.ஜ.கவில் உள்ள பெண்களை குறிப்பாக நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசியதால் டெல்லி சென்ற தேசிய மகளிர் ஆணையத்திடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு வந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் தற்போது மேலும் ஒரு தி.மு.க'வின் பேச்சாளர் ஆபாசமாக பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது சென்னையில் பல இடங்களில் அன்பழகன் நூற்றாண்டு விழா என்ற பெயரில் தி.மு.க சார்பில் பல விழாக்கள், மேடைப்பேச்சுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த மேடைப்பேச்சு கூட்டத்தில் பா.ஜ.க'வின் மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை கொண்டு கேவலமாக பேசியுள்ளார்.
குறிப்பாக அண்ணாமலை அவர்களின் தாயை சொல்லவே வாய் கூசும் வார்த்தைகளால் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் இவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தி.மு.க'வையும், ஆபாச பேச்சையும் பிரிக்க முடியாது என மக்கள் அனைவரும் அறிந்ததே! இந்த நிலையில் ஆங்காங்கே திராவிட கூட்டங்கள், திராவிட பயிற்சி பாசறைகள், திராவிட பயலரங்கங்கள், திராவிட மாடல் வகுப்பறைகள் என கூட்டம் போட்டு பேச்சுக்கு பயிற்சி அளிக்கும் தி.மு.க இதைத்தான் பேச கற்றுக் கொடுக்கிறதா என கேள்வியும் எழுந்து வருகிறது! இது குறித்து பாஜகவின் மாநில செயலாளார் S.G.சூர்யா தனது twitter பதிவில் இதுதான் உங்களுடைய கண்ணியமா? இதைத்தான் நீங்கள் கற்றுக் கொண்டீர்களா? இதைத்தான் கோபால வர குடும்பம் உங்களுக்கு கற்றுத் தருகிறதா? இதைத்தான் திராவிட பயிலரங்கங்கள் வைத்து கற்றுக் கொடுக்கிறீர்களா? எனவும் காட்டமாக தனது twitter பதிவில் குறிப்பிட்டுள்ளார்.