Begin typing your search above and press return to search.
தி.மு.க. அடக்க முடியாத யானை: பேரவையில் தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட ஸ்டாலின்.!
திமுகவை யாராலும் அடக்க முடியாத யானை என்று எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

By :
திமுகவை யாராலும் அடக்க முடியாத யானை என்று எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஆளுநர் உரையில் யானையும் இல்லை, மணி ஓசையும் இல்லை என கூறியிருந்தார். மேலும், யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழியையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்து ஸ்டாலின் பேசகையில், திமுகவை யானை எனக் குறிப்பிட்ட எதிர்கட்சித் தலைவருக்கு நன்றி எனவும், அடைக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள். திமுக என்பது அடக்க முடியாத யானை என குறிப்பிட்டார்.
Next Story