Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. மட்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நடமாட முடியாது.. அ.தி.மு.க. நிர்வாகி அதிரடி பேட்டி.!

தி.மு.க. மட்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நடமாட முடியாது.. அ.தி.மு.க. நிர்வாகி அதிரடி பேட்டி.!

தி.மு.க. மட்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நடமாட முடியாது.. அ.தி.மு.க. நிர்வாகி அதிரடி பேட்டி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Feb 2021 6:07 PM GMT

ஆட்சியில் இல்லாத போதே திமுக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. அப்படி ஒரு வேளை வந்துவிட்டால் மக்கள் யாரும் வெளியே நடமாட முடியாது என்று அதிமுக நகர செயலாளர் நெடுஞ்செழியன் கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 21ம் தேதி கரூர் வருகை தருகிறார். இதற்கான பணிகளை கரூர் மாவட்ட அதிமுக செய்து வருகிறது.

இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி, முதலமைச்சர் வருகையை பொறுத்துக்கொள்ளாமல் திட்டமிட்டு வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார். முதலமைச்சர் வருகின்ற வேளையில் திமுக சார்பில் வேளை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளார். வேண்டும் என்றே திமுகவினர் அராஜகம் செய்து வருகின்றனர்.

அது அதிமுக ஐடி விங் நிர்வாகி நவீன் குமார் உள்ளிட்ட மூன்று பேர் கரூர், பஜார் கடை வீதி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த பகுதி வழியாக வந்த திமுகவினர் அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நவீன் குமார் உள்ளிட்ட மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இது தொடர்பாக மத்திய நகர அதிமுக செயலாளர் நெடுஞ்செழியன் கூறும்போது, திமுக ஆட்சியில் இல்லாதபோதே இப்படி வன்முறை சம்பவங்களில் இறங்கியுள்ளனர். ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாது. வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடங்களை கற்பிப்பார்கள் என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News