Kathir News
Begin typing your search above and press return to search.

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மு.கருணாநிதி பெயர் வைக்க திட்டமிடும் தி.மு.க

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மு.கருணாநிதி பெயர் வைக்க திட்டமிடும் தி.மு.க

Mohan RajBy : Mohan Raj

  |  15 May 2022 11:45 AM GMT

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க நிறுவனமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் அருகில் இருக்கும் முக்கிய ரயில் நிலையமான எழும்பூருக்கு முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி பெயர் வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை தி.மு.க தரப்பில் இருந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில தி.மு.க குழு கூட்டம் அவைத் தலைவர் எம்.பெரியசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது, அந்தக் கூட்டத்தில் சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எழுதிய கடிதத்தில் இதே கோரிக்கையை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து தி.மு.க ஆட்சி அமைத்ததும் 2020 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் உரையாற்றிய எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.பரந்தாமனும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தி.மு.க வர்த்தகர் அணி கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Source - News 7

Next Story
கதிர் தொகுப்பு
Trending News