Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. என்றாலே ரவுடி கட்சி, அராஜக கட்சி, அடாவடி பண்ணுகின்ற கட்சி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

தி.மு.க. என்றாலே ரவுடி கட்சி, அராஜக கட்சி, அடாவடி பண்ணுகின்ற கட்சி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

ThangaveluBy : Thangavelu

  |  20 March 2021 7:20 AM GMT

கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசும்போது, திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைப் அவதூறாகப் பேசி வருகின்றார்.





மேலும், என்னை போலி விவசாயி என்று ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் என்னை மட்டும் சொல்லவில்லை, ஒட்டு மொத்த விவசாயிகளையும் கொச்சை படுத்தி வருகிறார்.

கடந்த காலங்களில் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபொழுது, ஊழல் மட்டுமே செய்து வந்தார். தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி மிகச்சிறப்பாக பணியாற்றி 100 விருதுகளை வாங்கியுள்ளார்.





மேலும், தமிழக முதலமைச்சராக கருணாநிதி எப்போது வந்தரோ அன்று முதல் ஊழல் பிறந்து விட்டது. திமுக என்றாலே ரவுடி கட்சி, அராஜக கட்சி, அடாவடி பண்ணுகின்ற கட்சி என்ற நிலைமை ஆகியுள்ளது. இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News