Kathir News
Begin typing your search above and press return to search.

அவதூறு வழக்கில் ஆர்.எஸ்.பாரதி மார்ச் 18ம் தேதி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மார்ச் 18ம் தேதி நேரில் ஆஜராகும்படி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவதூறு வழக்கில் ஆர்.எஸ்.பாரதி மார்ச் 18ம் தேதி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 March 2021 7:31 PM IST

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மார்ச் 18ம் தேதி நேரில் ஆஜராகும்படி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் கற்ப்பிக்கும் வகையில் திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

இதனிடையே தமிழக அரசு சார்பில் ஆர்.எஸ்.பாரதி மீது, 2016ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இதனையடுத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டது.





இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி வழக்கு தொடர்பாக மார்ச் 18ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஆர்.எஸ்.பாரதிக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார். எப்போதும் திமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் மீது அவதூறான கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகவே உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News