Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் நிலத்தை பறித்துக்கொண்ட தி.மு.க., பிரமுகர்.. வாழ்வதற்கு வழியின்றி கருணை கொலை செய்ய முதியவர் கோரிக்கை.!

கோவையில் நிலத்தை பறித்துக்கொண்ட தி.மு.க., பிரமுகர்.. வாழ்வதற்கு வழியின்றி கருணை கொலை செய்ய முதியவர் கோரிக்கை.!

கோவையில் நிலத்தை பறித்துக்கொண்ட தி.மு.க., பிரமுகர்.. வாழ்வதற்கு வழியின்றி கருணை கொலை செய்ய முதியவர் கோரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Jan 2021 8:47 PM GMT

கோவை அருகே திமுக பிரமுகர்கள் அபகரித்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்க முடியாததால் தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் முதியவர் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த கந்தசாமி 70, என்பவர் மனு அளிக்க வந்திருந்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அரசூரில் எனக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

எனது குடும்பத்தினருக்கும் சொந்தமான அந்த பூர்வீக நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 5 கோடி ரூபாய். இந்த நிலத்தை அரசூரைச் சேர்ந்த திமுக பிரமுகரும், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரும் மேலும் இவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் இருவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டனர்.

இந்த நிலத்தை மீட்க 10 ஆண்டுகளாக போராடியும் முடியவில்லை. வயதான காலத்தில் என்னால் இனியும் அலைய முடியாது. கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். எனவே, வாழ முடியாத நிலையில் உள்ள என்னால் நீதிமன்ற வழக்குகளுக்கு செலவு செய்யவும் முடியவில்லை.

எனவே, எனது நிலத்தை மீட்டுதர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை கருணை கொலை செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

எப்போதுதான் திமுகவினர் திருந்துவார்கள் என தெரியவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News