Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா.. தி.மு.க.விற்கு உதவியாக இருந்த நடத்துனர் சஸ்பெண்ட்!

17 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் திமுக வேட்பாளர் மற்றும் கட்சி சின்னம் பொறித்த துண்டு பிரசுரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா.. தி.மு.க.விற்கு உதவியாக இருந்த நடத்துனர் சஸ்பெண்ட்!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 April 2021 11:17 AM GMT

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி தெள்ளூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க இருந்ததாக தெள்ளூரை சேர்ந்த ராமமூர்த்தி 57, அலமேலுரங்காபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திபன் 51, ஆகியோரை பறக்கும் படையினர் பிடித்தனர்.


அவர்களிடம் இருந்து 17 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் திமுக வேட்பாளர் மற்றும் கட்சி சின்னம் பொறித்த துண்டு பிரசுரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பேர் மீது அரியூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்நிலையில், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக ஈடுபட்ட கார்த்திபன் 51, அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். பணப்பட்டுவாடாவில் கைதாகி சிறை சென்றதால் நடத்துனர் கார்த்திபனை பணியிடை செய்து, வேலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News