Kathir News
Begin typing your search above and press return to search.

சுபமுகூர்த்த நாளில் பொறுப்பேற்ற தி.மு.க. மண்டல தலைவர்கள்!

சுபமுகூர்த்த நாளில் பொறுப்பேற்ற தி.மு.க. மண்டல தலைவர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  7 April 2022 11:55 AM GMT

கோவை மாநகராட்சியில் மண்டல தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர்கள் சுபமுகூர்த்த நாளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், கோவை மண்டல தலைவர்கள் தேர்தல் கடந்த மார்ச் 30ம் தேதி நடைபெற்றது. இதில் 75 திமுக கவுன்சிலர்கள் இருக்கும் நிலையில் அவர்கள் 5 மண்டலத்திற்கான தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதே சமயம் நேற்று (ஏப்ரல் 6) நல்ல நேரமான காலை 9.30 மணி முதல் 10.30க்குள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியுடன் இருக்கும் திராவிட கழகத்தினர் சொல்படி திமுகவினர் செயல்பட்டு வரும் வேளையில் தற்போது நல்ல நேரம் பார்த்து மண்டலத் தலைவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News