Kathir News
Begin typing your search above and press return to search.

எங்க உதயநிதி 3 மாச குழந்தையா இருக்கும்போதே ஜெயிலுக்கு போனவரு தெரியுமா? - கூச்சமில்லாமல் முட்டு கொடுத்த ஆபாச பேச்சாளர் சைதை சாதிக்

மூன்று மாத குழந்தையாக இருக்கும் பொழுது சிறை சென்றவர் உதயநிதி என திமுகவின் ஆபாச பேச்சாளர் சைதை சாதிக்

எங்க உதயநிதி 3 மாச குழந்தையா இருக்கும்போதே ஜெயிலுக்கு போனவரு தெரியுமா? - கூச்சமில்லாமல் முட்டு கொடுத்த ஆபாச பேச்சாளர் சைதை சாதிக்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2023 12:31 PM GMT

மூன்று மாத குழந்தையாக இருக்கும் பொழுது சிறை சென்றவர் உதயநிதி என திமுகவின் ஆபாச பேச்சாளர் சைதை சாதிக் முட்டுக்கொடுத்து பேசும் வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

கொள்கைக்கான கட்சி! சமூக நீதிக்கான கட்சி! பெண்களுக்கான நீதி பெற்று தரும் கட்சி! கடவுள் மறுப்பு கொள்கையில் ஸ்ட்ராங்காக உள்ள கட்சி! என திமுகவை கட்டமைக்க பல பிம்பங்கள் மேடைப்பேச்சுகளாலும், மீடியாக்களாலும் ஏற்படுத்தப்பட்டாலும் அவ்வப்போது சைதை சாதிக் போன்ற பேச்சாளர்கள் அந்த கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் ஊசி வைத்து குத்தி விளையாடுகின்றனர்.

தற்போது மிக குறுகிய காலத்தில் திமுகவில் உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் கொண்டு வந்து இளைஞர் அணி தலைவராக்கி, எம்எல்ஏ'வாக்கி, இப்பொழுது அமைச்சர் பதவி ஆக்கி வைத்திருக்கிறார்கள்! இவை அனைத்தும் திமுகவில் மூன்று ஆண்டுகளில் நடந்து முடிந்துள்ளது!

1960களில் கட்சியை துவங்கிய அண்ணாதுரை கடின உழைப்பில் தான் தொடங்கினார், அதன் பிறகு கடின உழைப்பில் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைவர் திமுக பதவியை பிடித்தார். கருணாநிதி இறக்கம் தருவாயில் கூட திமுகவின் தலைவர் என்ற பொறுப்பு ஸ்டாலினுக்கு கொடுக்கவில்லை கிட்டத்தட்ட ஸ்டாலினுக்கு அது 65 வயதிற்கு மேல்தான் தான் கிடைத்தது.

ஆனால் தற்பொழுது உதயநிதியோ எல்லாத்தையும் சீக்கிரம் அடைந்து விட வேண்டும் என நினைக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த சூழலில் அவருக்கென ஒரு தனியாக ஒரு ஆதரவு கூட்டத்தை வைத்துக்கொண்டு மீடியாக்களில் தன்னை பற்றி புகழ்ந்து பேசுவதும், தன்னை பற்றி புகழ்ந்து எழுவதும், கட்சிக்கு தன்னை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பது போன்று சொல்வதற்கு ஆட்களை நியமித்து தனியாக இயங்குகிறார் உதயநிதி என பல தரப்பிலிருந்தும் கருத்துக்கள் எழுகின்றன.

இந்த நிலையில் திமுகவில் ஆபாச பேச்சுக்கு பெயர் போன சைதை சாதிக் சமீபத்தில் தான் பாஜாக'வில் உள்ள மகளிர் பற்றி குறிப்பாக நடிகை குஷ்பூ பற்றி மேடையில் துவெளியில் மக்கள் மத்தியில் ஆபாசமாக பேசி அதற்க்கு பதிலாக டெல்லி சென்று காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு வந்தார்.

தற்பொழுது இதே சைதை சாதிக் தனியார் தொலைக்காட்சி யூ ட்யூப் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மூன்று மாத குழந்தையா இருக்கும்போதே எங்கள் உதயநிதி சிறை சென்றார் தெரியுமா என பேட்டி கொடுத்து நெறியாளர் மாதேஷ் அவர்களை ஜெர்காக வைத்துள்ளார்.


இப்படி உதயநிதி புகழ் வாடகை திமுகவில் ஒரு கூட்டம் சுற்றுவதும் அது பிடிக்காமல் திமுகவில் அதிர்ச்சியாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் சமீப காலமாக தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் கட்சிக்கு நல்லது இல்லை என பல திமுக மூத்த தலைவர்கள் நினைக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News