Kathir News
Begin typing your search above and press return to search.

யாரையோ திருப்திப்படுத்த இப்படியா கேவலமா பேசுவீங்க? - ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சிற்கு அண்ணாமலை கேள்வி

தி.மு.க எம்.பி ஆ.ராசா பேசியது புயலை கிளப்பிய நிலையில் இதுகுறித்து அண்ணாமலை தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

யாரையோ திருப்திப்படுத்த இப்படியா கேவலமா பேசுவீங்க? - ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சிற்கு அண்ணாமலை கேள்வி

Mohan RajBy : Mohan Raj

  |  13 Sep 2022 9:36 AM GMT

தி.மு.க எம்.பி ஆ.ராசா பேசியது புயலை கிளப்பிய நிலையில் இதுகுறித்து அண்ணாமலை தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

தி.மு.க எம்.பி ஆ.ராசா இந்துக்களைப் பற்றி அவ்வப்போது அவதூறாக பேசுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தி.க தலைவர் வீரமணிக்கான பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் பேசிய ஆ.ராசா கூறியதாவது, 'உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாம இருந்தால், பெர்சியாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாக தான் இருக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் சொல்கிறது இப்படிப்பட்ட கொடுமை வேற எந்த நாட்டிலாவது உண்டா?

'இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்' என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆ ராசாவின் இந்த பேச்சு குறித்து வீடியோ பகிர்ந்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதாவது திமுக எம்பி மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தி உள்ளார் மற்றவர்களை திருப்தி படத்தை மட்டும் அவர் குறிக்கோளாகக் கொண்டுள்ளார் தமிழகம் தங்கள் சொந்தம் என நினைக்கும் அவர்கள் எந்த மனநிலை மிகவும் துரதிஷ்டமானது என குறிப்பிட்டுள்ளார்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News