Kathir News
Begin typing your search above and press return to search.

வன்கொடுமை அதிகரிக்கும்.. குடும்பம் வறுமையில் சிக்கும்.. மதுக்கடை திறப்புக்கு ராமதாஸ் கடும் கண்டனம்.!

தமிழகத்தில் புதிய தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி தொற்று அதிகம் உள்ள சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது இதற்கு பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொற்று அதிகம் உள்ள நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது பேரழிவை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.

வன்கொடுமை அதிகரிக்கும்.. குடும்பம் வறுமையில் சிக்கும்.. மதுக்கடை திறப்புக்கு ராமதாஸ் கடும் கண்டனம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 Jun 2021 3:15 AM GMT

தமிழகத்தில் புதிய தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி தொற்று அதிகம் உள்ள சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது இதற்கு பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொற்று அதிகம் உள்ள நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது பேரழிவை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.





இந்நிலையில், மதுக்கடை திறப்பு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.




ஒரு புறம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த திமுக இப்போது அதே தவறை செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்கு கிடைக்கும் மிகக் குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News