Kathir News
Begin typing your search above and press return to search.

ஊத்தி கொடுத்து குடியை கெடுப்பவர்தான் ‘டிடிவி தினகரன்’.. அமைச்சர் சி.வி.சண்முகம்.!

ஊத்தி கொடுத்து குடியை கெடுப்பவர்தான் ‘டிடிவி தினகரன்’.. அமைச்சர் சி.வி.சண்முகம்.!

ஊத்தி கொடுத்து குடியை கெடுப்பவர்தான் ‘டிடிவி தினகரன்’.. அமைச்சர் சி.வி.சண்முகம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Feb 2021 5:04 PM GMT

டிடிவி தினகரன் ஊத்தி கொடுத்து அடுத்தவர்களின் குடியை கெடுத்து வருகின்றார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியில் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை தமிழக அரசு கொடுத்து வருகிறது. சசிகலாவின் சொத்துக்கள் அரசுடையாக்கியது. மற்றும் கட்சியில் எந்த காரணத்தை கொண்டும் தினகரன் மற்றும் சசிகலாவை சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனவும் முதலமைச்சர் தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.

இதனிடையே ஒரு பக்கம் அமைச்சர் சி.வி. சண்முகமும் சசிகலா, தினகரனை வறுத்தெடுத்து வருகிறார். கடந்த வாரம் சசிகலாவை ஆதரித்து சிலர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இது தொடர்பாக அமைச்சர் சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில் காரசாரமாக இருந்தது. அதாவது நான் சொன்னால் ஒரு லட்சம் போஸ்டரை அடித்து ஒட்டுவார்கள் என கூறினார்.

சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் சண்முகம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சண்முகம் நிதானமாகத்தான் பேசினாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். அதாவது அமைச்சர் சண்முகம் மறைமுகமாக போதையில் உளறியிருக்கலாம் என்பதுதான் அவரின் பேச்சில் தென்படுகிறது.

இந்நிலையில், தினகரன் குறித்து இன்று பேட்டியளித்த அமைச்சர் சண்முகம் அவரை சராமாரியாக தாக்கி பேசியுள்ளார். என்னை நிதானமாகப் பேசினாரா என்று தினகரன் கேட்டுள்ளார். ஆமா தினகரன்தான் எனக்கு ஊத்திகுடுத்தாரு. ஏன்னா அது தினகரனின் குலத்தொழில் என பேசினார். அது மாதிரி ஊத்திக்கொடுத்து எத்தனை பேர் குடியை கெடுப்பானுங்க தெரியுமா என கூறினார். தற்போது அமைச்சரின் பேச்சு வைரலாக பரவி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News