Kathir News
Begin typing your search above and press return to search.

நூறு நாட்களில் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை - ஒப்புக்கொள்ளும் துரைமுருகன் !

Durai murugan Accepts !

நூறு நாட்களில் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை - ஒப்புக்கொள்ளும் துரைமுருகன் !

Mohan RajBy : Mohan Raj

  |  4 Sep 2021 2:02 PM GMT

"நூறு நாட்களில் நாங்கள் எதையுமே செய்யவில்லை, இனிதான் எங்களுக்கு வேலையே" என தி.மு.க அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

நேற்று தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் நூறு நாள்கள் தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, "90 நாள்களை கொரோனாவை ஒழிக்கவே போராடவேண்டியிருந்தது. உண்மையில், நூறு நாள்களில் நாங்கள் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை. அதேபோல் யாரும் குற்றம் சொல்லும் அளவுக்கும் எங்கள் ஆட்சி இல்லை. இனிமேல்தான் எங்களுக்கான பரீட்சையே இருக்கிறது" என்றார்.

நூறு நாட்களில் நாங்கள் அதை செய்தோம், இதை செய்தோம் என தி.மு.க தரப்பிர் பல தற்புகழ்ச்சிகள் சுற்றி கொண்டிருந்தாலும் தி.மு.க'வின் மூத்த அமைச்சரே இதுவரை நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News