Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சர் ஸ்டாலினுக்காக திருக்கோஷ்டியூரில் சிறப்புப் பூஜை செய்த அவரது மனைவி துர்கா!

முதலமைச்சர் ஸ்டாலினுக்காக திருக்கோஷ்டியூரில் சிறப்புப் பூஜை செய்த அவரது மனைவி துர்கா!

ThangaveluBy : Thangavelu

  |  15 May 2022 11:49 AM GMT

ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்.

ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்கின்ற வேண்டுதலை திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின் வைத்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை நிறைவேற்ற துர்கா ஸ்டாலின் நேற்று மாலை பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தார். ஏற்கனவே இவர் அனைத்து கோயில்களுக்கும் நேரடியாக சென்று வழிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நேற்று சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற சவுமியநாராயணப் பெருமாள் கோயிலுக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக துர்கா ஸ்டாலின் வந்திருந்தார்.

அவருக்கு தேவஸ்தான் அறங்காவலர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனிடைய ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என்கின்ற நோக்கத்தில் மூன்று முறை இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டதாகவும், தற்போது கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தியிருப்பதாக ஊழியர்கள் கூறினர். அது மட்டுமின்றி கோயில் விமானத்துக்கு செப்பு தகட்டில் தங்கத்தகடு பொருத்துகின்ற பணியையும் துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி வரும் நிலையில் அவரது மனைவி அவரது வேண்டுதல் நிறைவேறியதால் கோயில், கோயிலாக சென்று வழிப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News