Kathir News
Begin typing your search above and press return to search.

ஊடகங்கள் தி.மு.க.வுக்கு ஜால்ரா போடுகிறது! - எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

ஊடகங்கள் தி.மு.க.வுக்கு ஜால்ரா போடுகிறது! - எடப்பாடி பழனிசாமி காட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  23 Sep 2021 3:36 AM GMT

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: திமுக தற்போதைய அமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என 13 பேர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது பற்றி எப்போதாவது ஊடகங்கள் திமுகவிடம் கேள்வி எழுப்பியுள்ளதா என்றார்.

அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் எங்களை பற்றிதான் பேசிகிறீர்கள். திமுகவை பற்றி பேசினால் யாரும் தொலைக்காட்சிகளை செய்திகளை பார்க்க மாட்டார்களா எனவும் காட்டமாக செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

உண்மை செய்திகளை வெளியிடுங்கள் அப்போதுதான் மக்களுக்கு தெரியும். தற்போது ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் ஊடக தர்மமே இல்லாமல் போய்விட்டது. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடற வேலையை மட்டும் செய்கிறது.

ஆனால் மக்களின் பிரச்சனைகள் குறித்து எடுத்து சொல்வதே இல்லை. இனிமேல் ஆவது மக்களின் பிரச்சனைகள் குறித்து செய்திகளை வெளியிடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Source: Namathu Amma

Image Courtesy: Admk Twiter

Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News