Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க.வினர் ஜெயிப்பதற்கு பெட்டிகளை மாற்றுவார்கள்! தொண்டர்கள் விழிப்புடன் இருக்க எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால் திமுகவினர் பெட்டிகளை மாற்றி ஜெயிக்க முயற்சி செய்வார்கள் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.

தி.மு.க.வினர் ஜெயிப்பதற்கு பெட்டிகளை மாற்றுவார்கள்! தொண்டர்கள் விழிப்புடன் இருக்க எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

ThangaveluBy : Thangavelu

  |  25 Sep 2021 11:21 AM GMT

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால் திமுகவினர் பெட்டிகளை மாற்றி ஜெயிக்க முயற்சி செய்வார்கள் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் விடுப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினருடன் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக தொண்டர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இல்லை என்றால் திமுகவினர் பெட்டிகளை மாற்றி நம்மை தோல்வியுற செய்ய வைப்பார்கள். எனவே தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்து விட்டார். ஆட்சிக்கு வந்த பின்னர் எதையும் நிறைவேற்றவில்லை. எனவே வரப்போகின்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டது என்ற செய்தியை நான் காதில் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News