Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. அரசே வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்கிடு: எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை!

நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40,000 ரூபாய் நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும். மறு சாகுபடி செலவிற்காக, ஹெக்டேர் ஒன்றுக்கு 12,000 ரூபாய் நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. அரசே வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்கிடு: எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  23 Nov 2021 7:53 AM GMT

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதில் லட்சக்கணக்கானோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போன்றவர்களுக்கு உடனடியாக வெள்ள நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் சென்னை மாநகர், புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்து மூழ்கிய இடங்களை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.


மிக கனமழையினால், மாநிலத்தின் அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைகளில் இருந்தும், ஏரிகளில் இருந்தும் உபரிநீர் அப்படியே ஆறுகளில் திறந்து விடப்படுவதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், வேளாண் நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் நீரில் மூழ்கி உள்ளதோடு, தரைப் பாலங்கள், சிறு சிறு தடுப்பணைகள் அடித்துச் செல்லப்ப்டுள்ளன.

மேலும், நான் பொதுக்களையும், விவசாயிகளையும் நேரடியாக சந்தித்தபோது, அவர்கள் தெரிவித்த முக்கியமான கருத்துக்கள்: தமிழ்நாடு முழுவதும் லட்சணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. மேலும், வாழை, மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பிற பயிர் வகைகளும் பெருமளவு பாதிப்படைந்துள்ளன. இதற்கான நிவாரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.


யூரியா, டிஏபி உரங்கள் வரலாறு காணாத உச்ச விலைக்கு விற்கப்படுகின்றன. விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, டீசல் விலை உயர்வின் காரணமாக வேளாண் செலவுகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிர் உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்துள்ளதால் அரசு நிவாரணமாக அறிவித்துள்ள, முழுமையாக சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் என்பதை உயர்த்தி, ஹெக்டேருக்கு 40,000 ரூபாயாகவும், நெற்பயிர் மறு சாகுபடி செலவு ஹெக்டேர் ஒன்றுக்கு 6,038 ரூபாய் என்பதை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதையும் மாநில அரசு அதிகாரிகளோ, அமைச்சர் பெருமக்களோ நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை. பாதிப்படைந்த வீடுகள், கால்நடைகள் போன்றவைகள் கணக்கெடுக்கப்படவில்லை. நிவாரணமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படவில்லை. அரசு வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கியுள்ள 300 கோடி ரூபாய் சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க மட்டுமா? அல்லது விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தையும் உள்ளடக்கியதா என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.

மேலும், முந்தைய ஆட்சியில் (அம்மாவின் அரசு) நிவாரணத் தொகையாக அதிகபட்ச 2 ஹெக்டேர் என்று இருந்ததை மாற்றி, மழை வெள்ளத்தால் சேதமடைந்த நிலப்பரப்பு முழுவதற்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால், இப்போது இந்த அரசு அறிவித்த நிவாரண அறிவிப்பில் எவ்வளவு நிலம் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.

இதுவரை சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மருத்துவ முகாம்களோ, கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்களோ நடத்தப்படவில்லை. முக்கியமாக, கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இன்னும் வெள்ளநீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளதால், வெள்ளம் பாதித்த பெரும்பான்மையான மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு வெள்ள நிவாரணமாக, அம்மா அரசால் கடந்த முறை வழங்கியது போல, வாழ்வாதார உதவித் தொகையையும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் கோரினர்.

இந்த திமுக அரசு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40,000 ரூபாய் நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும். மறு சாகுபடி செலவிற்காக, ஹெக்டேர் ஒன்றுக்கு 12,000 ரூபாய் நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News