இந்திய அளவில் டிரெண்டிங் ஆன #எடப்பாடியார்.. எதுக்கு தெரியுமா.!
இந்திய அளவில் டிரெண்டிங் ஆன #எடப்பாடியார்.. எதுக்கு தெரியுமா.!
By : Kathir Webdesk
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்கினார்.
அதிமுக கட்சி தற்போது தன்னிச்சையாக பிரச்சார களத்தில் இறங்கிவிட்டது. மற்றொரு பரபரப்பு என்றால், பொங்கல் பரிசாக ரேசன் அட்டை ஒவ்வொன்றுக்கும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறார்.
ஆயிரம் ரூபாய் வழங்கியதே பெரிது என்று நினைத்திருந்த மக்களுக்கு தற்போது 2,500 ரூபாய் என்றதும் வாய்பிளந்து நிற்கின்றனர். இதில் எடப்பாடி தொகுதியில் பேசிய முதலமைச்சர் ‘’43 ஆண்டுகால வரலாற்றில் ஒருமுறை கூட எடப்பாடி தொகுதியில் திமுக வென்றதில்லை.
இது அதிமுகவின் எஃகு கோட்டையாக இன்று வரை இருந்து வருகிறது. அனைத்துக்கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு எப்போதும் உண்டு.
இந்நிலையில், ட்விட்டரில் இந்திய அளவில் எடப்பாடி பழனிசாமி என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பின்னால் அதிமுக ஐடிவிங் உள்ளது எனவும் கூறப்படுகிறது.