Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்குச்சாவடி மையங்களை சுத்தமாக வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளை சுத்தமாக வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களை சுத்தமாக வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

ThangaveluBy : Thangavelu

  |  3 April 2021 1:47 PM GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.


வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளை சுத்தமாக வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.




இது குறித்து ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், வாக்குச்சாவடி வகுப்பறையில் கம்ப்யூட்டர், ஸ்டார்ட் போர்டுகள் இருந்தால் முழுமையாக பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வகுப்பறையை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News