Begin typing your search above and press return to search.
சத்தமில்லாமல் வெற்றியை கொண்டாடுங்கள்.. தொண்டர்களுக்கு அ.தி.மு.க. தலைமை அறிக்கை.!
வாக்கு எண்ணிக்கை நாளை துவங்க உள்ள நிலையில், அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர்கள் வெற்றி அறிக்கை வெளியிட்டுள்ள சம்பவம் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை துவங்க உள்ள நிலையில், அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர்கள் வெற்றி அறிக்கை வெளியிட்டுள்ள சம்பவம் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொண்டர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது அமைதியாகவும் ஆற்றலுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
அண்ணா வழியில் அமைதியாகவும், எம்ஜிஆர் வழியில் விழிப்புடனும், ஜெயலலிதா வழியில் ஆற்றலுடனும் பணிகள் நடக்கட்டும் என அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வீதிகளில் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும், கொரோனா கட்டுபாட்டு விதிகளை கட்டாயம் பின்பற்றவும் தொண்டர்களுக்கு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
