Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டு மனையை ஆக்கிரமிப்பு செய்த தி.மு.க. பிரமுகர்.. எஸ்.பி. அலுவலகத்தில் முறையிட்ட உரிமையாளர்.!

புகார் மனுவில், தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடும் திமுக பிரமுகர் தாரை மணியன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு மனையை ஆக்கிரமிப்பு செய்த தி.மு.க. பிரமுகர்.. எஸ்.பி. அலுவலகத்தில் முறையிட்ட உரிமையாளர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 July 2021 12:08 PM GMT

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ளது ரங்கசமுத்திரம் என்ற பகுதி. அதே பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜிக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த இடத்திற்கு அருகே சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகர் தாரை மணியன் என்பவருக்கு சொந்தமான 2.10 ஏக்கர் காலி நிலம் உள்ளது.

இந்நிலையில், திமுக பிரமுகர் தாரை மணியன், தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகவும், இது பற்றி தாரை மணியனிடம் கேட்டதற்கு, ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பழனிச்சாமி தரப்பில் இன்று புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.


அந்த புகார் மனுவில், தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடும் திமுக பிரமுகர் தாரை மணியன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவினர் எப்போதும் அடுத்தவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் குறியாக இருக்கின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே திமுகவினரிடம் இருந்து 5 ஆண்டுகளாக நிலங்களை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை பொதுமக்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News