Begin typing your search above and press return to search.
2ஜி வழக்கு விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கிருப்பார் என அனைவரும் அறிவர் - ஆ.ராசாவை கலாய்த்த முதல்வர்.!
2ஜி வழக்கு விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கிருப்பார் என அனைவரும் அறிவர் - ஆ.ராசாவை கலாய்த்த முதல்வர்.!
By : Mohan Raj
தி.மு.கவின் ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை என்னுடன் விவாதம் செய்ய தயாரா என கேட்ட கேள்விக்கு இன்று சரியான பதிலடியை தமிழக முதல்வர் எடப்பாடி குடுத்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது, "2ஜி வழக்கில் விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கிருப்பார் என எல்லோருக்கும் தெரியும்" என்றார்.
மேலும் ஆ.ராசா'வை விமர்சித்த எடப்பாடியார், “காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதே குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தான் ஆ.ராசா. 2 ஜியில் முறையான நடைமுறையை பின்பற்றியிருந்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும்" எனவும் குற்றம் சாட்டினார்.
கடைசியாக, "2ஜி வழக்கில் சி.பி.ஐ, போதிய ஆதாரத்தை சமர்பிக்கவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது" எனவும் முடித்துக்கொண்டார்.
Next Story